Published : 21 Feb 2018 08:47 PM
Last Updated : 21 Feb 2018 08:47 PM

டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்: கேஜ்ரிவால் பேச்சு

டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமல் இன்று தன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசுகையில், ''அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கிக் கிடந்தனர். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். ஊழலை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளை ஆதரியுங்கள், கல்வி நிலையம் வேண்டும் என்பவர்கள் கமலை ஆதரியுங்கள்.

கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகன். திரைப்படத்தில் ரசிகனாக இருந்த நான், அவரது நிஜவாழ்க்கையிலும் ரசிகனாக ஆனேன்டெல்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.

கறைபடியாத கரமுடையவர் கமல். ஊழலுக்கு எதிராக அவர் ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சி. தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது. டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்'' என்று கேஜ்ரிவால் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x