Published : 19 Feb 2018 07:48 AM
Last Updated : 19 Feb 2018 07:48 AM
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்.12-ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு நேற்று அறிவித்தது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து கடந்த ஆண்டு 200 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்தது. பின்னர், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. எனினும், இத்திட்டம் ரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யாவிட்டால் ஏப்.12-ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக ஆலோசனைக்குப் பின்னர் போராட்டக் குழு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT