Published : 13 Feb 2018 10:23 AM
Last Updated : 13 Feb 2018 10:23 AM
கோவை ஈஷா யோகா மையத்தில் 24-வது மகா சிவராத்திரி விழா இன்று (பிப்.13) மாலை 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு நடைபெறுகிறது. யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சிறப்புரையாற்றுகிறார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தியானம், மகா மந்திர உச்சாடனை, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை, மாலை 6 மணி முதல் பிப். 14-ம் தேதி காலை வரை நடைபெற உள்ளன.
புகழ்பெற்ற பாடகர் சோனு நிகம், தலெர் மெஹந்தி, மோஹித் சவுஹான், சியன் ரொனால்டோ, சந்தோஷ் ஷெட்டி குழுவினர், மணிப்பூர் ட்ரம்மர்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவினரின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.ஆதியோகிக்கு மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெறு கிறது.
கடந்த ஆண்டு மகா சிவராத்திரியின்போது 112 அடி உயர ஆதியோகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அப்போது ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகி சிலைக்கு அணிவிக்கப்பட்டது. அந்த மாலையில் உள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும், விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
விழாவையொட்டி, லிங்கபைரவி தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலம், யோகேஷ்வர லிங்க தரிசனம், மகா யோக யக்ஞம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்கின்றனர் என்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT