Published : 22 Jan 2018 09:26 AM
Last Updated : 22 Jan 2018 09:26 AM

துபாய் சிறையில் 7 குமரி மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மரியஜான், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெரோம், ஜான்சன், ஜெகிஸ்கான், அனந்து, சகாபினு ஸ்டீபன், அருண்சிங் ஆகியோர் கத்தார் நாட்டில் வஹ்ரா பகுதியில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த 18-ல், ஜாசிம் அகமது என்பவரது, ‘அல்பிலாத்’ எனும் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டியதாக, துபாய் கடற்படையால் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

7 பேரையும் மீட்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், கத்தார் இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டது. மீனவர்களை மீட்க நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அப்போது தூதரக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x