Published : 24 Dec 2017 03:12 PM
Last Updated : 24 Dec 2017 03:12 PM
அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் தினகரனிடம் வரும் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாவால் உருவான உதயசூரியன் சின்னத்தையும், எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சுயேச்சை சின்னம் வென்றுள்ளது. தினகரனுக்கு வாக்களித்த ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி.
பணபலம், படைபலத்தை வென்றுள்ளார் தினகரன். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியை முறியடித்திருக்கிறோம். மக்கள் நம்பிக்கை வைத்ததாலேயே தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
இது துரோக ஆட்சி. இந்த ஆட்சி அகற்றப்படும் என்று தினகரன் உறுதியளித்தார். மக்களும், அதிமுக தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் தினகரனிடம் வரும்.
நாங்கள் பணப் பட்டுவாடா செய்யவில்லை. அதிமுகதான் பணப் பட்டுவாடா செய்தது. அதிமுகவில் 60 ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள்'' என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT