Published : 24 Dec 2017 12:37 PM
Last Updated : 24 Dec 2017 12:37 PM

அதிமுக ஒரு ஆலமரம்; யாராலும் நெருக்கடி தர முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஆர்.கே.நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 24,132 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 13,057 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 6,606 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 1245 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 318 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுக ஒரு ஆலமரம். ஆர்.கே.நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது. யாராலும் நெருக்கடி தர முடியாது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x