Published : 24 Dec 2017 12:23 PM
Last Updated : 24 Dec 2017 12:23 PM

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி: சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்

ஆர்.கே.நகரில் நோட்டாவை விட பாஜக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4-வது சுற்று முடிவிலும் நோட்டாவை விட பாஜக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது.. பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 220 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் நோட்டாவுக்கு 325 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில், ''தமிழக பாஜக சாதனை; ஒரு தேசியக் கட்சி நோட்டா பெற்ற வாக்குகளில் கால்பங்கே பெற்றுள்ளது. பாஜக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கும் தினகரனுக்கும்தான் போட்டி நிலவுவதாக பாஜகவினர் மூலம் அறிந்துகொண்டேன். எனவே, தமிழர்கள் வாக்கு தினகரனுக்குதான் போய்ச் சேர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x