Published : 21 Dec 2017 08:56 AM
Last Updated : 21 Dec 2017 08:56 AM

தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன்

ஆர்.கே.நகரில் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளதால் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை, தொகுதியில் மேற்பார்வை நடத்திய காவல் ஆணையர் விஸ்வநாதன், "ஆர்.கே.நகரில் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளதால் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர், 5 காவலர்கள், சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்புக்காக 3,300 போலீஸாரும் 1,500-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் தொகுதியில் உள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x