Published : 16 Dec 2017 06:44 PM
Last Updated : 16 Dec 2017 06:44 PM

ஆர்.கே.நகரில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிசாமி பேச்சு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்குவதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம்.

டிடிவி தினகரனை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆர்.கே.நகர் வாக்குகளைப் பிரித்து திமுகவை வெற்றி பெறச் செய்ய தினகரன் சதி செய்கிறார். ஆளும் அதிமுக வெற்றிபெற்றால்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

திமுக அதிகாரத்தில் இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஸ்டாலின் ஒன்றும் செய்துவிடவில்லை. மக்களைச் சந்திப்பதைக் கூட கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x