Published : 13 Dec 2017 12:14 PM
Last Updated : 13 Dec 2017 12:14 PM
ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொன்ற செய்தி தமிழக போலீசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மனைவிக்கு வேலை, முனிசேகருக்கு உயர்தர சிகிச்சை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வாட்ஸ் அப்பில் வைத்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.
காவலர்கள் மத்தியில் வாட்ஸ் அப்பில் வைரலாகும் தகவல்:
சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ஆய்வாளர் பெரியமாண்டி மரணச் செய்தி தமிழக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
1. வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.
2. அவர் பணி ஓய்வு பெரும் வயது வரை முழு சம்பளம் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு தரவேண்டும்.
3. அவரது மனைவிக்கு உடனடியாக குரூப்-2 நிலையில் அரசு வேலை வழங்க வேண்டும்,
4. படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு உரிய உயர் சிகிச்சை அரசு செலவில் தரப்பட வேண்டும்.
5. இனிவரும் காலங்களில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க அனுப்பும்போது சிறப்புப்பயிற்சி எடுத்த ஆயுதப்படைக் காவலர்களை துப்பாக்கிகளுடன் பணிக்கு அனுப்ப வேண்டும்.
6. குறைந்தது ஓர் உதவி ஆணையர் தலைமையில்தான் குழுவை அனுப்ப வேண்டும்.
7. உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சுட்டுப்பிடிக்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது.
8. வெளிமாநிலக் கொள்ளையர்களை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு அமைக்க வேண்டும். அதில் பன்மொழி பேசக்கூடிய காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பல்வேறு மாநில கள நிலவரங்கள் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளவும் பல மாநில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சிறப்பான வழிவகைகளை உருவாக்கித் தர வேண்டும்.
இவ்வாறு பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT