Published : 07 Dec 2017 10:48 AM
Last Updated : 07 Dec 2017 10:48 AM

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

மாதவரம் பால்பண்ணை பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ்குமார் (37). மீன் பண்ணை தொழில் செய்து வந்த இவர், கடந்த 4-ம் தேதி இரவு பாடி மேம்பாலம் அருகே வரும்போது, இவரது பைக் மீது கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் இரவு ஸ்டான்லி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல்களை எடுத்தனர். வலது சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிக்கும், இடது சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. தீக்காயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஸ்டான்லி மருத்துவமனை தோல் வங்கியில் தோல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிக்கு இதயம் பொருத்தப்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து குளோபல் மருத்துவமனைக்கு இதயத்தை டாக்டர்கள் குழுவினர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x