Published : 27 Nov 2017 09:56 AM
Last Updated : 27 Nov 2017 09:56 AM

புள்ளியியல் அலுவலர் தேர்வை 4,500 பேர் எழுதினர்

புள்ளியியல் அலுவலர் தேர்வை 4,500 பேர் எழுதினர்.

தமிழக அரசின் மருத்துவக் கல்வித் துறை மற்றும் இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவத் துறையில் புள்ளியியல் அலுவலர் பதவியில் 31 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி நேற்று எழுத்துத்தேர்வை நடத்தியது.

சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தேர்வை 4,500 பேர் எழுதினர். காலையில் பாடத்தேர்வும், பிற்பகல் பொது அறிவு தேர்வும் நடைபெற்றன.

60 சதவீதம் பேர் பங்கேற்பு

தேர்வு எழுத 7,593 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x