Published : 23 Nov 2017 08:22 AM
Last Updated : 23 Nov 2017 08:22 AM
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக திரைத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினரும், இயக்குநருமான நடிகர் சசிககுமார் கொடுத்துள்ள புகாரில், பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டலால்தான் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
சசிகுமாரின் புகாரின் பேரில், அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 306-வது பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனை பிடிக்க காவல் ஆய்வாளர்கள் முத்துராஜ், குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், பைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாலும், வீட்டுப் பெண்களை தூக்கி விடுவேன் என்று கூறியதாலும் தற்கொலை செய்து கொள்வதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அன்புச்செழியன் மீது கந்துவட்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் மறுத்து விட்டனர். காவல் துறையில் முக்கிய அதிகாரிகள் அன்புச்செழியனுக்கு ஆதரவாக இருப்பதால், கந்துவட்டி புகாரில் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் தயங்குவதாக திரைப்படத்துறையினர் தெரிவித்துள்ளனர். அன்புச்செழியன் பண பலமும், அதிகார பலமும் உள்ளவர் என்பதால் அவர் மீது போலீஸார் கந்து வட்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT