Published : 21 Nov 2017 09:41 AM
Last Updated : 21 Nov 2017 09:41 AM

புதிய மெட்ரோ ரயில் செயலி; 10 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய செயலி பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரையில் 10 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சென்னையில் தற்போது, விமான நிலையம் – ஆலந்தூர் – சின்னமலை, பரங்கிமலை – நேரு பூங்கா, இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 25 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, மெட்ரோ ரயில் இயக்க வழித்தட விவரம், மெட்ரோ ரயில்கள் வருகை - புறப்பாடு நேரம் உள்ளிட்ட வசதிகளை பயணிகள் பெறும் வகையில் ஒருங்கிணைந்த ‘ஆன்ராய்டு செல்போன் செயலி’ (ஆப்) வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) என்ற பெயரில் புதிய செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானது. மெட்ரோ ரயில் கட்டண விவரம், வழித்தடங்கள், பயணம் நேரம், அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பேருந்து எண்கள், பாதுகாப்பு உதவி எண்கள், அட்டையில் ரீசார்ஜ் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, பயணிகளுக்கான முக்கிய அறிவிப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட வசதிகளை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதனால் பயணிகள் மத்தியில் இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் புதியதாக தொடங்கப்படும் சேவைகளும் இதில், உடனுக்குடன் இணைக்கப்படுகிறது. இதுவரையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x