Published : 23 Oct 2017 07:16 PM
Last Updated : 23 Oct 2017 07:16 PM
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அப்படி ஒரு சோதனை நடத்தப்படவில்லை என்று ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மண்டலத்தைச் சார்ந்த ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. உண்மையில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் அப்படி ஒரு சோதனை நடத்தப்படவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT