Published : 18 Oct 2017 10:55 AM
Last Updated : 18 Oct 2017 10:55 AM

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் சிறை பிடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 3,000 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அதில் சிலர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை விசுவாசம் என்பவரது விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மரியநேசர், சந்தியா, மோசஸ், பாலன், சுதன், ரோமன், பிரின்ஸன், பாஸ்கர் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, மன்னார் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 8 மீனவர்களும் விசாரணைக்கு பின், மன்னார் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செந்தில்வேல் கூறியது: கடந்த 14-ல் டெல்லியில் இருநாட்டு அமைச்சர்கள் இடையே 3-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது.

சம்பிரதாயமாக பேச்சுவார்த்தை நடத்தாமல், மீனவர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை உருவாக்க இருநாட்டு உயர் மட்டக் குழுவை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x