Published : 13 Oct 2017 09:46 AM
Last Updated : 13 Oct 2017 09:46 AM

மேட்டூர் அணை நீர்வரத்து 31,236 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 97.30 அடியாகவும், நீர் இருப்பு 61.39 டிஎம்சி-யாக உயர்ந்தது.

இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகபட்சமாக 95 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் நிரம்பியது. தற்போது நீர்மட்டம் 97.30 அடியைக் கடந்த நிலையில், நீர்வரத்தின் அளவு கணிசமாக இருப்பதால், ஓரிரு நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x