Published : 11 Oct 2017 06:19 AM
Last Updated : 11 Oct 2017 06:19 AM
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து தவறான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெங்கு பாதிப்பு, இறப்புகள் குறித்து தவறான புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சரியான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
இன்று நடைபெறும் (11-ம் தேதி) அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து கூட்ட முடிவில்தான் தெரிவிக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT