Published : 29 Sep 2017 09:28 AM
Last Updated : 29 Sep 2017 09:28 AM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்: தினகரனுடன் தீவிர ஆலோசனை

குடகில் இருந்து சென்னை திரும்பிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், டிடிவி தினகரனை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்துள்ள வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 18 பேரும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு குடகுக்கு சென்ற டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களை சந்தித்து சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் வெற்றிவேல், ஏழுமலை, முத்தையா, தம்பிதுரை, சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு வந்தனர். அங்கு தினகரனை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், தகுதி நீக்கம் செய்யப்படாத தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அக்.4-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x