Published : 26 Sep 2017 12:47 PM
Last Updated : 26 Sep 2017 12:47 PM
தி.நகர் பகுதியை சுற்றி அசோக் நகர் , எம்.ஜி.ஆர் நகர் , கே.கே.நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு பூட்டை உடைத்து திருடும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 சவரன் நகையை போலீஸார் மீட்டனர்.
சென்னை அசோக் நகர், கே.கே.நகர், கோடம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், தி.நகர் போன்ற பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் பூட்டை உடைத்து திருடும் கும்பலை பிடிக்க தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் அசோக் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் அருள்ராஜ் தலைமையிலான தனிப் படையினர் தீவிர விசாரணையில் இரண்டு வாலிபர்கள் சிக்கினர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் கோடம்பாக்கம் தாஸ்புரத்தை சேர்ந்த விக்னேஷ்(18), கோடம்பாக்கம் சின்ன ராஜ பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த , சாய் கிருஷ்ணன்(18) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அசோக் நகர் எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளில் திருட்டு, செயின் பறிப்பு வழக்கு மற்றும் கோடம்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியது, கே.கே.நகரில் கோவிலில் உண்டியல் உடைப்பு, எம்.ஜி.ஆர் நகரில் ஏர்டெல் கடை உடைப்பு மற்றும் தி.நகரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சித்தது போன்ற 8 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 35 சவரன் தங்க நகை மற்றும் ரூ.50,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT