Published : 26 Sep 2017 11:02 AM
Last Updated : 26 Sep 2017 11:02 AM

டெங்கு காய்ச்சலால் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 2 பள்ளி சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பவரின் மகன் பார்கவ் (9). கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பார்கவை, சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் பார்கவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பார்கவ், கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பார்கவ் உயிரிழந்தான்.

நீலங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான ரஞ்சித்குமாரின் மகன் கார்த்திக் ராம் (8). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கார்த்திக் ராம், கடந்த 23-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில் நேற்று மாலை உயிரிழந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x