Published : 22 Sep 2017 08:23 AM
Last Updated : 22 Sep 2017 08:23 AM
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையை கடந்து வந்து மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்தனர். பின்னர் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை கடற்படையினர் அறுத்து கடலுக்குள் மூழ்கடித்தனர். மேலும் அந்தோனி என்பவரது விசைப் படகையும் கடற்படை ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT