Published : 14 Sep 2017 01:18 PM
Last Updated : 14 Sep 2017 01:18 PM

டிடிவி அணி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- அரசு தலைமை வழக்கறிஞரிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் வாதம் நடைபெற்று வந்தபோது டிடிவி தினகரன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.

நீதிபதி எம்.துரைசாமியிடம் பேசிய அவர், தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி அரசு திட்டமுள்ளது. ஆனால் எங்கள் எம்எல்ஏக்களை அவ்வாறு தகுதி நீக்கம் செய்யமுடியாது. அதனால் எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அத்துடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கேள்வி எழுப்பினார்.

 இதுதொடர்பாக இன்று மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x