Last Updated : 04 Sep, 2017 09:11 AM

 

Published : 04 Sep 2017 09:11 AM
Last Updated : 04 Sep 2017 09:11 AM

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நீதிமன்றத்தில் புகார்

தனது மகன் என உரிமை கோரி கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பல கட்ட விசாரணைக்குப் பிறகு பராமரிப்பு செலவு கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.

இந்நிலையில், கதிரேசன், உயர் நீதிமன்ற கிளை பதிவாளரிடம் மனு அளித்தார். அதில், ‘மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம், உயர் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் தாக்கலான வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பில் தாக்கலான பிறப்பு, பள்ளி மாற்று மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்கள், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க’ கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x