Published : 27 Aug 2017 11:08 AM
Last Updated : 27 Aug 2017 11:08 AM

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநரிடம் வலியுறுத்தினோம்: துரைமுருகன்

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது. எனவே சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம்" என்று ஆளுநரை சந்தித்தபின் திமுக துணை பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார்.

ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிரிந்துகிடந்த அதிமுக அண்மையில் ஒன்றிணைந்தது. ஆனால், இந்த இணைப்பு டிடிவி தினகரன ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் முதல்வரை மாற்ற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் கடிதம் கொடுத்தனர்.

அவரைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.பி.,கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியின் ஜயதாரணி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது. எடப்பாடிக்கு வெறும் 113 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கின்றது. இந்நிலையில், எடப்பாடி அரசு நீடிக்கக்கூடாது. எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஒருவேளை ஆளுநர சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். தமிழகத்தின் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கவனித்து வருவதாக ஆளுநர் கூறினார். ஆளுநரின் நடவடிக்கையைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்ட முடிவு இருக்கும். அடுத்தகட்ட முடிவை எங்கள் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எடுப்பார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x