Last Updated : 24 Aug, 2017 12:18 PM

 

Published : 24 Aug 2017 12:18 PM
Last Updated : 24 Aug 2017 12:18 PM

சொகுசு வாழ்க்கை வாழவில்லை; பாதுகாப்புக்காக இங்கு தங்கியுள்ளோம்: நிலக்கோட்டை தங்கதுரை பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அங்கிருந்தால் மிரட்டப்படுவோம். பாதுகாப்பு கருதியே இங்கு தங்கியுள்ளோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., நிலக்கோட்டை தங்கதுரை கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி சின்ன வீராம்பாட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று டிடிவி தினகரன் புதுச்சேரி விடுதிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிலக்கோட்டை தங்கதுரை அளித்த பேட்டியில், "நான்கு நாட்கள் இங்கு தங்குவதற்காக வந்துள்ளோம். இதில் இரண்டு நாட்கள் முடிந்துள்ளன. எங்கள் அணிக்கு எம்

எல்.ஏக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உயரம். இது பற்றி முழுமையாக தெரிவிக்க முடியாது.

வெளியில் சென்ற பிறகு ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி முடிவு செய்வோம். எங்களது துணை பொதுச் செயலாளர் அறிவுரைப்படி கருத்து பரிமாற்றம் செய்து வருகிறோம். இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.

நாங்கள் உல்லாசமாக தங்கியிருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஆனால் உண்மையில் எவ்வித வசதிகளும் இன்றி காட்டில் வசிக்கிறோம். இது தான் சொகுசு வாழ்க்கையா?

தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அங்கிருந்தால் மிரட்டப்படுவோம். பாதுகாப்பு கருதியே இங்கு தங்கியுள்ளோம். எங்களது சொந்தப் பணத்திலே இங்கு தங்கியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x