Published : 22 Aug 2017 11:31 AM
Last Updated : 22 Aug 2017 11:31 AM
தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக 4 இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை இன்று (செவ்வாய்க்கிழ்மை) வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், பாஸ்போர்ட் போன்ற இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்றார்.
துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் நிதி மற்றும் வீட்டு வசதித்துறை ஒதுக்கப்பட்டது.
நிதித்துறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முன்பு அவர் அமைச்சராக இருந்த மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வதுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT