Published : 26 Jul 2017 08:25 AM
Last Updated : 26 Jul 2017 08:25 AM

அதிமுக அணிகள் இணைப்பா? - டெல்லியில் இரு தரப்பும் ஆலோசனை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இரட்டை இலையை மீட்க தீவிரம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக டெல்லியில் இரு தரப்பினரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. தற்போது ஓபிஎஸ், முதல்வர் கே.பழனிசாமி அணிகள் தவிர, டிடிவி தினகரன் தலைமையிலும் ஒரு அணி செயல்பட்டு வருகிறது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாகவே செயல் பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் இருந்த எம்எல்ஏ ஆறுக்குட்டி, சமீபத்தில் முதல்வர் கே.பழனிசாமி அணியில் இணைந்தார். இது ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து தர்மயுத்தத்தை நடத்தி வருவதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதைக் கண்டுகொள்ளாத முதல்வர் பழனிசாமி அணி, மீதமுள்ள 4 ஆண் டுகளும் ஆட்சியை முழுமையாக நடத்தி முடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-ம் தேதிக் குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெறாமல் தேர்தலை நடத்தினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஓபிஎஸ், பழனிசாமி அணிகள் கருதுகின்றன. ஏற்கெனவே இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தங்களுக் கான ஆதரவு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த ஆவணங் களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

ஒருவேளை, பொதுச் செயலா ளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று தேர்தல் ஆணை யம் அறிவித்துவிட்டால் அது முதல் வர் கே.பழனிசாமி தரப்புக்கு எதிராக அமைந்துவிடும். எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை வைத்து முடிவெடுத்தால் ஓபிஎஸ் அணிக்கு எதிர்ப்பாக மாறிவிடும். எனவே, தேர்தல் ஆணையம் முடிவை தெரிவிப்பதற்கு முன்பாக இரு அணிகளும் இணைந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் அடுத் தடுத்த நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு அணியின ரும் டெல்லியில் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகவும், அதில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் தினகரன் ஆதிக்கம் செலுத்துவதை இரு தரப்பினரும் விரும்பவில்லை. இதனால், இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாகவும் விரைவில் இரு தரப்பும் இணைய உள்ளதாகவும் அதிமுக அம்மா அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x