Published : 28 Dec 2016 11:32 AM
Last Updated : 28 Dec 2016 11:32 AM
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.
பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து பகல்பத்து திருநாள் வரும் 29-ம் தேதி தொடங்கு கிறது. பகல்பத்து திருநாட்களில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து தினமும் ஒவ் வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்துக்குச் சென்று பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா (பரமபத வாசல் திறப்பு) ஜனவரி 8-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அன் றைய தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து திருநாளில் ஜன.14-ம் தேதி திருக்கைத்தல சேவை, ஜன. 15-ம் தேதி வேடுபறி, ஜன.17-ம் தேதி தீர்த்தவாரி, ஜன.18-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொ. ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT