Published : 31 Mar 2016 02:59 PM
Last Updated : 31 Mar 2016 02:59 PM

விஜயகாந்த் தெளிவாகத்தான் இருக்கிறார்: எதிர்க்கட்சிகள் புகாருக்கு பிரேமலதா பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாகத்தான் இருக்கிறார் என கட்சியின் மகளிர் அணி செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இதில் பிரேமலதா பேசியதாவது: எந்த கட்சியில் இருந்தும் பிரிந்துவராமல் சுயமாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தேமுதிக. தொடங்கியவுடனேயே 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே இயக்கம் தேமுதிக. தொண்டர்களின் உழைப்பால்தான் இந்த கட்சி தமிழகத்தின் தவிர்க்க முடியாத கட்சியாக உள்ளது.

விஜயகாந்த் தெளிவாகத்தான் இருக்கிறார். நம்பர் ஒன் கூட்டணியாக இது தற்போது உள்ளது. இதற்கு பத்திரிகை யாளர்களுக்குத்தான் நன்றி சொல் லவேண்டும். கிண்டல் செய்தாலும் சரி, பாராட்டி எழுதினாலும் சரி விஜயகாந்த் இல்லாமல் எதையும் செய்வதில்லை.

அதிமுக, திமுகவை விரட்டி அடிக்கும் கூட்டணி தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி. ஏன் இதை உறுதியாகச் சொல்கிறேன் என்றால் திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் என மக்களால் முத்திரை பதிக்கப்பட்ட கட்சிகள். கடந்த 50 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றார் அவர்.

முன்னதாக, மேற்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணி வர வேற்றார். கே.பாலபாரதி எம்எல்ஏ, மதிமுக செயலர் செல்வ ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் சந்தானம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x