Published : 07 Jul 2016 10:59 AM
Last Updated : 07 Jul 2016 10:59 AM

மேட்டூரில் பார்வை பறிபோன விவகாரம்: அரசு மருத்துவர்கள் - 2 பேர் பணியிட மாற்றம்

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை செய்த 19 பேரின் பார்வை பறிபோன விவகாரம் தொடர்பாக, கண் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த 2 மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத் துவமனையில் கடந்த ஜுன் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 23 பேர் பங்கேற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதில், 19 பேரின் கண் பார்வை பறிபோனது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இப் பிரச்சினையில் பார்வை பறிபோன 19 பேர் சேலம் மற்றும் கோவை அரசு மற்றும் தனி யார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிரச் சினை தொடர்பாக சுகாதார துறை அதிகாரி கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தி, அங்கு கண் அறுவை சிகிச்சை செய்ய தற்காலிக தடை விதித்தனர்.

மேலும், நோய் தொற்று கிருமி மாதி ரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்த னர். இப்பிரச்சினை தொடர்பாக, மேட்டூர் அரசு மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த மருத்து வர்கள் சுபா, வாழப்பாடி மருத்துவமனைக் கும், மருத்துவர் ராஜேந்திரன் ஜலகண்டா புரத்துக்கும், செவிலியர் கவுசல்யா இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x