Published : 05 Dec 2016 11:07 AM
Last Updated : 05 Dec 2016 11:07 AM

முதல்வர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம்: வாசன்

தமிழக முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், பின்பு மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தமாகா பிரார்த்திப்பதாக வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பக் கூடிய நிலையில், நேற்று மாலை திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.

இருப்பினும் தொடர்ந்து சிறப்பு மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார். இத்தகைய சூழலில் சிறந்த மருத்துவ சிகிச்சையும், தமிழக மக்களுடைய நல்வாழ்த்துகளும், அதிமுக தொண்டர்களுடைய பிரார்த்தனையும் முதல்வருக்கு உறுதுணையாக இருக்கிறது.

தமிழக முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், பின்பு மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அனைவரோடும் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வாழ்த்துகிறது, பிரார்த்திக்கிறது'' என்று வாசன் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x