Published : 05 Dec 2016 10:44 AM
Last Updated : 05 Dec 2016 10:44 AM
மருத்துவர்களின் தொடர் முயற்சியால் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பூரண குணமடைந்து இல்லம் திரும்பி, தனது பணிகளை தொடங்கிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இருமாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து, ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என்ற நிலையில், நேற்று மாலை திடீர் என்று உடல் நலம் பாதிக்கப்பட்டது மிகுந்த கவலை அளித்தது.
மருத்துவர்களின் தொடர் முயற்சியால் அவர் மீண்டும் பூரண குணமடைந்து இல்லம் திரும்பி, தனது பணிகளை தொடங்கிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும் வென்று வந்தவர். தற்போதும் வெற்றி பெற்று வருவார், வர வேண்டும்'' என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT