Published : 05 Dec 2016 11:19 AM
Last Updated : 05 Dec 2016 11:19 AM
தமிழக முதல்வரை இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி அளிப்பது பற்றி முடிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, இவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்துச்செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர் - துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவன மேற்கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆரை மருத்துவ வசதி பெற்ற தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தியதுபோல, செய்யும் வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் அவசியம்.
முதல்வர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT