Published : 13 Oct 2016 08:32 AM
Last Updated : 13 Oct 2016 08:32 AM

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். கடந்த 5-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து கேட்ட றிந்த குழுவினர் தேவையான ஆலோ சனைகளை வழங்கினர். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.

அவர்களின் பரிந்துரைப்படி டாக்டர் கள் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னை வருவ தாக சொல்லப்படுகிறது. சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக் கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மீண்டும் லண்டன் டாக்டர் வருவதால், முதல்வர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x