Published : 15 Feb 2016 09:36 AM
Last Updated : 15 Feb 2016 09:36 AM

மக்கள் விரும்பும் கூட்டணியை ஜி.கே.வாசன் அறிவிப்பார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் ஓசூரில் நேற்று நடந்தது. இதில் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்ரவரி மாத இறுதியில், மக்கள் விரும்பும் கூட்டணியை மாநில தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார். தமிழ் மாநில காங்கிரஸ் உள்ள கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், கர்நாடக மாநில எல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி இரு தலைவர்களை திருப்திப்படுத்த அமைக்கப்பட்ட கூட்டணியாகும். இதில் தொண்டர்களுக்கு விருப்பம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x