Published : 07 Jan 2017 05:37 PM
Last Updated : 07 Jan 2017 05:37 PM

மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு

மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும்.

நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருக்கிற அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் உணர முடிகிறது.

அரசியலுக்கு வருவது என் ஆசையல்ல. அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியலுக்கு வர விருப்பம் உள்ளது. அதை கூர்ந்து கவனித்து வருகிறேன். மக்கள் விரும்பினால் இந்த அரசியல் பணியை செய்ய நான் தயங்க மாட்டேன்'' என்றார் தீபா.

செய்தியாளர் சந்திப்பால் தீபாவின் இல்லம் அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அதன் புகைப்படப் பதிவுகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x