Published : 20 May 2016 09:17 AM
Last Updated : 20 May 2016 09:17 AM

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வி: முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமக வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். பென்னாகரத்தில் அன்புமணிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. 234 தொகுதி களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட னர். அனைவரும் வேட்புமனு தாக்கல் செய் தனர். கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதி யிலும், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியிலும், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஜெயங்கொண்டம் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடி, திருச்செந் தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தூத்துக்குடி, திருச்செந் தூர் தொகுதிகளில் பாமக மாற்று வேட் பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோல் துறையூர் (தனி) தொகுதி யில் பாமக வேட்பாளர் மற்றும் மாற்று வேட் பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. இதனால் 232 தொகுதிகளில் மட்டும் பாமக போட்டியிட்டது. இதில் அரவக் குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி கோபிச் செட்டிபாளையம் தொகுதி பாமக வேட் பாளர்கள் அதிமுகவிலும், வாசுதேவநல் லூர் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் திமுகவிலும் இணைந்தனர். இதனால் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அதிர்ச்சி அடைந்தனர். வேட்பாளர்கள் திமுக, அதிமுகவில் இணைந்தது பாமக வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பணம் கொடுத்து வேட்பாளர்களை வாங்கி விட்ட தாக அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பென்னாகரத்தில் அன்பு மணி ராமதாஸும், மேட்டூரில் ஜி.கே.மணியும், ஜெயங்கொண்டத்தில் ஜெ.குரு, தருமபுரியில் ஆர்.செந்தில், பாப்பிரெட்டி பட்டியில் ஏ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். அடுத்தடுத்த சுற்றுகளில் அனைவரும் பின்னடைவை சந்தித்து தோல்வி அடைந்தனர். பாமக வேட்பாளர்கள் போட்டியிட்ட ஆனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது, அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x