Published : 23 Dec 2015 10:54 AM
Last Updated : 23 Dec 2015 10:54 AM
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடலை இணையத்தில் பதிவேற்றியது யார் என்ற விவரத்தை அளிக்கக் கோரி யூடியூப் இணையதளத்தை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் எழுத்துபூர்வமாக நாடியுள்ளனர்.
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவர் மீதும் கோவை, சென்னை போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடலை இணையத்தில் பதிவேற்றியது யார் என்ற விவரத்தை அளிக்கக் கோரி யூடியூப் இணையதளத்துக்கு சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு முறை மின்னஞ்சல் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த ஐ.பி. முகவரியிலிருந்து பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்த நகரில், எந்த நாட்டிலிருந்து இந்தப் பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை கோரியுள்ளனர்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இருந்து ‘பீப்’ பாடலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT