Published : 05 Apr 2017 08:26 AM
Last Updated : 05 Apr 2017 08:26 AM

பிரபல நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை: திருமணமான ஒரு ஆண்டுக்குள் சோகம்

பிரபல நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபல மானவர் நந்தினி. இந்த தொடரில் இவர் ‘மைனா’ என்ற கதாபாத் திரத்தில் நடித்ததால் ‘மைனா’ நந்தினி என்று அழைக்கப்பட்டார். தற்போது மற்றொரு தொலைக் காட்சியில் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

‘வம்சம்', ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட தமிழ் திரைப் படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் கார்த்திக் என்ற கார்த்திகேயனை இவர் காதல் திருமணம் செய்து கொண் டார். விருகம்பாக்கம் விஎஸ்எஸ் நகரை சேர்ந்த கார்த்திகேயன், தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். கார்த்திகேயன், நந்தினி இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் கடந்த சில வாரங்களாக மன உளைச் சலில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ள னர். தற்போது, உடற்பயிற்சிக் கூடத்தை வேறு ஒருவரிடம் அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வடபழனி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கார்த்திகேயன் அடிக்கடி தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் அவர் அங்கு தங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து, தங்கும் விடுதி நிர்வாகிகள் விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை திறக்க முயன்றபோது, அது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்றனர்.

அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கார்த்திகேயன் சடல மாக கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் போலீஸார் கூறும்போது, “நந்தினிக்கும் அவரது கணவருக்கும் திருமணமான 2-வது மாதத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். இதை கார்த்திகேயன் விரும்பாததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு 3 பக்க கடிதத்தை கார்த்திகேயன் எழுதி வைத்துள்ளார். அதை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x