Published : 22 Jan 2015 04:36 PM
Last Updated : 22 Jan 2015 04:36 PM
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியே அதிமுக ஆட்சிக்குப் பாடமாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்துப் பேசினார்.
''பன்னீர்செல்வம் முதல்வராகும்போது யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். பதவி பறிப்பால் முதல்வர் தொகுதியிலேயே இடைத்தேர்தல் நடப்பது இதுதான் முதல் முறை. இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியே பினாமி ஆட்சிக்குப் பாடமாக இருக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT