Published : 28 Jul 2016 09:22 AM
Last Updated : 28 Jul 2016 09:22 AM

பாலாறு துணை நதியின் குறுக்கே மேலும் ஒரு புதிய தடுப்பணை: தடை ஆணை பெற கோரிக்கை

பாலாற்றுக்கு நீராதாரமாக விளங்கும் துணை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டு மானப் பணிகளில் ஆந்திர அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பது தெரி யவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் நந்தி துர்கத்தில் உருவாகும் பாலாறு அம்மாநிலத்தில் 97 கி.மீ, ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ, தமிழகத்தில் 223 கி.மீ தொலைவு பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது. ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஹந்திரி-நீவா திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவுபடுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே கட்டிய தடுப்பணையின் உயரத்தை அதிகரித்துள்ளனர். அதேபோல, பா லாற்றின் நீராதாரமாக விளங்கும் துணை ஆறுகளின் குறுக்கேயும் புதிய தடுப்பணைகளை கட்டும் பணிகளை ஆந்திர அரசு துரிதப் படுத்தி வருகிறது. இதன்மூலம், பாலாறு பயணிக்கும் வனப் பகுதி யில் கிடைக்கும் மழைநீர் மொத்த மும் புல்லூர் தடுப்பணைக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படும்.

1892-ம் ஆண்டு மெட்ராஸ்- மைசூர் ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஆந்திர அரசின் நட வடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், புல்லூர் தடுப்பணைக்கு 2 கி.மீ தொலைவில் உள்ள வனப் பகுதியில் பாலாற்றின் துணை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

இங்கு உள்ள ஜங்குமண்டா வனப் பகுதி 10 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு பெய்யும் மழைநீர் முழுவதும் துணை ஆறாக பயணித்து பாலாற்றுக்கு வந்து சேருகிறது. இங்கு தடுப்பணை கட்டுவதன் மூலம் பாலாற்றுக்கான வழக்கமான நீர்வரத்து பெரும்பகுதி தடுக்கப்படும் என்று கூறப் படுகிறது.

இது தொடர்பாக பசுமை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, ‘‘ஆந்திர மாநிலத்தில் குப்பம் தொகுதியில் உள்ள வனப் பகுதியில் பெய்யும் மழைநீர் மொத்தமும் பாலாற்றுக்கு வந்து சேர்ந்தது. இதன்மூலம், தமிழகத்தில் ஓடும் பாலாற்றுக்கு தடையில்லாமல் நீர் கிடைத்தது. ஆந்திர அரசின் தற்போதைய நடவடிக்கையால் வனப் பகுதியில் கிடைக்கும் மொத்த மழைநீரும் இனிமேல் பாலாறு வழியாக ஆந்திராவைக் கடந்து தமிழகத்துக்கு வந்துசேர வாய்ப்பு இல்லை. எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும். ஆந்திர அரசின் கட்டுமானப் பணிகளுக்கு தடையாணை பெறவேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x