Published : 25 May 2016 12:19 PM
Last Updated : 25 May 2016 12:19 PM
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
இத்தேர்வில் பார்வை மாற்றுத்திறன் கொண்டவர்களில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணகுமார் 500-க்கு 489 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ராணி 470 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை புதுச்சேரி ஏஆர்ஜிஎஸ்எஸ் பள்ளி மாணவி ஜெனிடா மேரி 468 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT