Published : 11 May 2015 03:49 PM
Last Updated : 11 May 2015 03:49 PM

நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது: திருமாவளவன்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

முன்னதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஆனால், தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை இவ்வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

இந்த இரண்டு தீர்ப்புகளையுமே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இரண்டு நீதிபதிகளுமே தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளனரா அல்லது நெருக்கடி காரணமாக தீர்ப்பு வழங்கினரா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

இந்த தீர்ப்பால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி என்று கூறுவது பொருத்தமாகாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x