Last Updated : 28 Feb, 2017 08:59 AM

 

Published : 28 Feb 2017 08:59 AM
Last Updated : 28 Feb 2017 08:59 AM

நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி களில் உள்ள கால்நடை மருத் துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக் கான (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் (விசிஐ - VCI), அகில இந்திய கால் நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPVT) மூலம் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகிறது. மீத முள்ள, மாநில அரசுகளுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

15 சதவீதம் இடங்கள்

இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங் களுக்கு, இந்த ஆண்டு அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடக் காது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரும் மே மாதம் 7-ம் தேதி நடத்துகிறது. அந்த நீட் தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு 15 சதவீதம் கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி

இதன்மூலம் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன. இவற்றில் 48 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. இந்த 48 இடங்களும், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் மாண வர்களும், அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்கட்டம்

நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படும் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPMT) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு 15 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் மற்றும் மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்ற நடைமுறையை பின்பற்றி கால்நடை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள 85 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x