Published : 02 Feb 2017 10:00 AM
Last Updated : 02 Feb 2017 10:00 AM

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

“தொடர்ந்து நீங்களே முதல்வ ராக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய சக்தியை நாங்கள் தரு கிறோம்” என்று சட்டப்பேரவை யில் முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தை பாராட்டி துரைமுருகன் பேசினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் ஓ. பன் னீர்செல்வம் பேசும்போது, “ஆளுநர் உரையில் எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந் தாலும், இந்த உரை கண் ணுக்குத் தெரியாத கானல் நீர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் இதை கானல் நீர் என்றது ஒரு காட்சிப்பிழை என கருதுகிறேன். எண்ணவும் இயலாத இமாலய சாதனைகளை இந்த அரசு நிகழ்த்தியுள்ளது. ஆனால், அவற்றை எண்ணிப் பார்க்க கூட எதிர்க்கட்சித் தலை வருக்கு மனமில்லை. ஆளுங்கட்சித் தலைவரின் சாதனைகளை மறைத்துப் பேசுவதும் எதிர்க்க வேண்டியதும்தான் அவரது தர்மம் என கருதுகிறாரோ என்னவோ தெரியவில்லை” என்றார்.

அப்போது எழுந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ‘‘எங்களுக்கு பாராட்ட மன மில்லை என்று கூறுகிறீர்கள். மனம் திறந்து சொல்கிறேன். நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி, ‘‘அதற்கு நீங்கள் எல்லா சக்தி யையும் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய சக்தியை தர நாங்கள் தயாராக இருக்கிறோம். (மீண்டும் அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி) உங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து எதுவும் வராமல் இருக்க வேண்டும். நீங்களே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று மனதார பாராட்டி மகிழ்கிறேன்” என்றார்.

துரைமுருகனின் இந்த பேச்சை திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சற்றே அதிர்ச்சியில் உறைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x