Published : 30 Jun 2017 08:50 AM
Last Updated : 30 Jun 2017 08:50 AM

‘நாகேஷ் திரையரங்கம்’ படத்துக்கு தடை கோரி நடிகர் ஆனந்த் பாபு வழக்கு

‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்துக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ், சென்னை தி.நகரில் தனது பெயரில் திரையரங்கம் வைத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 2009-ம் ஆண்டு இந்த திரையரங்கு வேறொருவரிடம் விற்கப்பட்டது. தற்போது ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் ‘டிரான்ஸ் இந்தியா மீடியா’ என்ற நிறுவனம் திகில் படத்தை தயாரித்துள்ளது. இதை இயக்குநர் ஐசக் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக் கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குடும்ப நற்பெயர் கெடும்

அந்த மனுவில் ‘‘வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்க ளிடம் முன்அனுமதி பெற வில்லை. இந்தப் படம் வெளி யானால் எங்களது குடும்பத் துக்கு என உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.

மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதி யின்றி, விளம்பரத்துக்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் இது தொடர்பாக படத் தயாரிப் பாளரும், இயக்குநரும் 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x