Published : 09 Dec 2016 09:45 AM
Last Updated : 09 Dec 2016 09:45 AM

நத்தம் தொழிலாளரின் குழந்தைக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி பரிசு

நத்தம் அருகே தொழிலாளரின் குழந்தைக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லினி பரிசுகளை வழங்கினார்.

நத்தம் அருகே உள்ள பன்னியான்மலை கிராமத்தில் ஊருக்கு வெளியே தோட்டத்தில் வசித்து வருபவர் பாக்கியம்(41). இவர் கூலித் தொழிலாளர். இவரது மனைவி புஷ்பம்(38). இவர்களுக்கு 3 பெண் குழந்தை கள், ஒரு ஆண் குழந்தை உள் ளது. கணவன், மனைவி இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாததால் வறுமையில் வாடுகின்றனர்.

இவர்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் உதவி செய்ய முன்வந்தது. எய்ட் ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அண்டை நாடான மொனாக்கோ நாட்டின் இளவரசி சார்லினி மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி பெறப்படுகிறது.

இளவரசி சார்லினி தற்போது தனது உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி உட்பட 11 பேர் கொண்ட குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் தான் நிதி உதவி அளிக்கும் பாக்கியம் குடும்பத்தினரை பன்னியான்மலை கிராமத்துக்கு வெளியே தோட்டத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது குழந்தைகளுக்கு கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட பரிசுப் பொருட் களை வழங்கினார். தொடர்ந்து உதவி அளிப்பதாக பாக்கியம் குடும்பத்தினரிடம் இளவரசி உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x