Last Updated : 24 Oct, 2015 07:29 AM

 

Published : 24 Oct 2015 07:29 AM
Last Updated : 24 Oct 2015 07:29 AM

தொடரும் உயிரிழப்புகள்: டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை- சுகாதார முன்னாள் இயக்குநர் வலியுறுத்தல்

சென்னை உட்பட தமிழகம் முழு வதும் டெங்கு காய்ச்சலால் உயி ரிழப்புகள் அதிகரித்து வரும் நிலை யில், போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுகா தாரத் துறை முன்னாள் இயக்கு நர் டாக்டர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உட்பட 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயி ரிழந்துள்ளனர். இதுபோல தமிழகம் முழுவதும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தெரி கிறது. அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் டெங்கு காய்ச்சல் என்று கூறி சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், இறந்த பிறகு டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை என்று சான்றிதழ் வழங்குவதாக உறவினர் கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் டாக் டர்களுக்கும், உறவினர்களுக்கும் மோதல்கள் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந் துத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்கு நரும், தமிழ்நாடு பொது சுகாதார சங்கத் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். பெரியவர்களால் டெங்கு காய்ச் சலை தாங்கிக்கொள்ள முடிகிறது. குழந்தைகள் தாங்கிக்கொள்ள முடி யாததால் உயிரிழந்துவிடுகின்றனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

கடைபிடிப்பதில்லை

ஆனாலும், அரசு டாக்டர்கள் உட்பட யாரும் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை உணருவதில்லை. டெங்கு காய்ச்சல் நோயாளிகளை முறையாக கண்காணிப்பதும், சரி யான நேரத்தில் சிகிச்சை அளிப் பதும் இல்லை. இதனால்தான் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சல் தொடர்பான அரசின் விதிமுறைகளை தனியார் மருத்துவமனைகளும் முறையாக கடைபிடிப்பதில்லை.

அரசு, தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு காய்ச்சலால் யாராவது உயிரிழந்தால் மூடி மறைக்கக் கூடாது. வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும். புள்ளி விவரங்கள் சரியாக இருந்தால்தான் எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு சரியாக இருக்கும்.

முழு பொறுப்பையும்..

தமிழகத்தில் டெங்கு காய்ச் சலை தடுக்க போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சாதா ரண ஏழை நோயாளிகளுக்கும் விஐபிக்களுக்கு நிகரான சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சலை தடுக்க முடி யும். டெங்கு காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்தால், சம்பந்தப்பட்ட மருத் துவமனையே முழு பொறுப்பையும் ஏற்குமாறு சுகாதாரத்துறை அறி விக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x