Published : 17 Feb 2017 08:26 AM
Last Updated : 17 Feb 2017 08:26 AM

தேர்தலை திணிக்க முயன்ற ஓபிஎஸ், திமுக சதி முறியடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

தமிழக மக்கள் மீது தேர்தலை திணிக்க முயன்ற ஓ.பன்னீர்செல் வம் மற்றும் திமுகவின் சதி முறிக் கப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. பதவியேற்பு விழா முடிந்த நிலையில், நேற்று இரவு அமைச்சர் டி.ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

ஓபிஎஸ் மற்றும் அவருடன் திமுகவைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து, எப்படியாவது தேர்தலை மக்கள் மத்தியில் திணிக்கலாம் என நினைத்திருந்தனர். தமிழக மக்களும், பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒன்று கூடி அவர்களுடைய சதியை முடியடித் துள்ளனர். தேர்தல் என்றால் மக்கள் வரிப்பணம் ரூ.1000 கோடி செலவாகும். அந்த சுமை மற்றும் வரிப்பணம் வீணாகாமல் தடுக்கப் பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி என்றென்றும் தமிழகத்தில் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x